குஜராத் பூகம்பம்
புஜ் என்ற புண்ணிய பூமி புதையுண்டது;
புற்களும் பூக்க வழியில்லை!
மழலையின் மனதில் மழலை கேள்விகள்; ஆ!
மனித வர்க்கத்தின் மகத்துவத்தின் ஆரம்பமா...
நிலச்சரிவில் பல்லுயிர்களின் தத்தளிப்பு;
அக்துஉணர்த்தாது உனது இரக்க குணத்தை,
ஐம்பூதங்களில் ஒன்றான உம்மையும் வணங்கினோமெ;
ஐயகோ! அனைவரையும் பழி தீர்த்த்விட்டாய்!
நிலச்சரிவில் பல்லுயிர்களின் தத்தளிப்பு;
அக்து உணர்த்தாது உனது இரக்க குணத்தை!
நிவாரண நிதியென நிறைய தருகின்றனர்.
என்நிலையில் தருவதற்கோர் இடமில்லை!
நிலையில்லா மனதின்கண் ஒன்றை தருகிறேன்;அக்து எனது கண்ணீர்!....................
2001 ஆகஸ்ட், ஆனந்த விகடனில் வெளியானது.
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கவிதகளை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.இருந்தாலும் படிக்கும் போது சோகமாக இருந்தது.
Post a Comment